• Wed. May 19th, 2021
அரசியல்

பத்து நாள் தான் ஆகுது இந்த அரசு சூப்பரா செயல்படுத்துப்பா!! அந்த முன்னாள் அமைச்சரா இப்படி பாராட்டினார்?

ByADMIN

May 19, 2021

தமிழ்நாட்டில் புதிய அரசு அமைந்து பத்து நாட்கள் தான் சென்றிருந்தாலும், சூப்பராக செயல்படுகிறது என்று முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர் பி உதயகுமார் தெவித்துள்ளார்.

இஸ்லாமிய மக்களுக்கு அதிமுக பாதுகாப்பு அரணாக விளங்கும் - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் - TN Assembly- RB Uthayakumar- Minister- AIADMK- DMK- MK Stalin- Muslims- CAA_NRC_NPR- CAA- TN ...

நேற்று திருமங்கலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த உதயகுமார் இந்த கொரோனா காலத்தில் புதியதாக பொறுப்பேற்ற திமுக அரசு எப்படி செயல்படுகிறது என்ற கேள்விக்கு பதில் அளித்த உதயகுமார், ” இந்த அரசு பொறுப்பேற்று 10 நாட்கள் தான் ஆகியுள்ளது எனினும் சிறப்பாக செயல்படுகிறது. இது போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு துரிதமான நடவடிக்கைளை மேற்கொண்டு இறப்புகளை கட்டுப்படுத்த வேண்டும். அதன் அடிப்படையில் இந்த அரசு சிறப்பாக செயல்படுகிறது. உயிர்பலி என்பது தமிழ்நாட்டில் அதிகரித்து வருகிறது. அதனால் போர்க்கால அடிப்படையில் மருத்துவர்கள், வருவாய் அதிகாரிகள், மற்றும் உள்ளாட்சி அதிகாரிகளுக்கு கவச உடைகள் வழங்க வேண்டும் என்று அரசின் கவனத்துக்கு கொண்டு செல்கிறேன்” என்று கூறினார்.

உதயகுமார் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திருமங்கலம் தொகுதியில் 14087 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்.


ADMIN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *