முல்லையின் வீட்டில் தங்கும் கண்ணன் ஐஸ்வர்யா! – Pandian Stores Serial Today Episode 18/08/2021

0
40
Facebook
Twitter
WhatsApp
Telegram
Join @ Times Tamil on Telegram

பாண்டியன் ஸ்டோர்ஸ்!

தனம் தன்னுடைய அண்ணனிற்கு போன் செய்து கண்ணனுக்கு உதவி செய்ய முடியுமா என கேட்கும் பொழுது அவர்., அவனை பற்றி தயவுசெய்து என்னிடம் பேசாதே என கூறிவிடுகிறார். இதை கேட்ட தனம் சரி என்று சொல்லிவிட்டு மொபைலை வைத்து விடுகிறார். முல்லை அப்பாவிற்கு போன் செய்து, கண்ணன் பாவம் என்றும் அவன் தங்குவதற்கு வழி இல்லாமல் தவித்து கொண்டிருப்பதை முல்லை தன்னுடைய அப்பாவிடம் எடுத்து கூறுகிறாள். எனினும் கல்யாணமே செய்துவிட்டான் அவனுடைய வாழ்க்கையை அவன் பார்த்து கொள்வான் என்று அவர் கூறுகிறார்.

நடு ரோட்டில் கண்ணன் ஐஸ்வர்யா!

மேலும் கண்ணனை நம்முடைய வீட்டில் தங்கவைக்கலாமா என்று அவரிடம் கேட்கிறார். அப்பொழுது உங்களுடைய அம்மா என்ன சொல்லப்போகிறாரோ என்று பதட்டம் அடைகிறார். எனக்காக இந்த உதவியை செய்யுங்கள் அப்பா என்று முல்லை மிகவும் வேண்டி கேட்டு விட்டு போனை வைக்கிறார். கண்ணனும் ஐஸ்வர்யாவும் நடு ரோட்டில் எங்கே போவது என தெரியாமல் நடு ரோட்டில் முழித்து கொண்டே இருக்கின்றனர். ஒரு தனி ரூம் எடுத்து தங்குவது தான் வழி என கண்ணனின் நண்பன் கூறுகிறான். அது தப்பாக இருக்குமே என கண்ணனும் ஐஸ்வர்யாவும் யோசிக்கின்றனர்.

பாரதி வீட்டில் லட்சுமியை விட்டு செல்லும் கண்ணம்மா! – Bharathi Kannamma Serial Today Episode 18/08/2021

முல்லை வீட்டிற்கு செல்லும் கண்ணன் ஐஸ்!

முல்லையின் அப்பா கண்ணன் மற்றும் ஐஸ்வர்யாவை வந்து சந்திக்கிறார். என்ன கண்ணா இதெல்லாம்! என்றும் ஐஸ்வர்யா நீயாவது சொல்லி இருக்கலாம்ல! என்றும் இருவரிடமும் பேசுகிறார். மேலும் இருவரையும் தன்னுடைய வீட்டிற்கு கூப்பிடுகிறார். நீங்க செய்தது சரி என்று நினைத்து உங்களை கூப்பிடவில்லை. வேறு வழி இல்லாமல் இருவரும் ரோட்டில் நிற்பதை பார்த்து, மனசு கேட்காமல் தான் உங்களை கூப்பிடுகிறேன் என்று கூறுகிறார். வீட்டிற்கு சென்ற கண்ணன் மற்றும் ஐஸ்வர்யாவை முல்லையின் அம்மா தடுத்து நிறுத்துகிறார்.

மையால கண்ணெழுத்தி என் வாலிபத்த மயக்குறியே! – சித்தி 2 சீரியல் நாயகி வெளியிட்ட ரீல்ஸால் சிலிர்த்து போன ரசிகர்கள்!

வெளுத்து வாங்கும் முல்லையின் அம்மா!

இவர்களை ஒருபோதும் வீட்டிற்குள் அனுமதிக்க முடியாது என மிகவும் உறுதியாக இருக்கிறார். இவர்களை வீட்டிற்குள் விட்டால் கஸ்தூரி மல்லி எல்லாம் நம்மை என்ன நினைப்பர் என்று கண்டவாறு திட்டுகிறாள். மிகவும் அசிங்கப்படுவதை தாங்க முடியாத ஐஸ்வர்யா வா மாமா நம்ம போகலாம் என்று கண்ணனை கூப்பிடுகிறாள். பிறகு முல்லையின் அப்பா, முல்லையின் அம்மாவை சமாதானம் செய்து இருவரையும் தன்னுடைய வீட்டிலேயே தங்க வைக்கிறார். எனினும் முல்லையின் அம்மா இருவரையம் ஜாடை மாடையாக திட்டி கொண்டிருக்கும் காட்சியுடன் இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிவடைகிறது.

டைம்ஸ் தமிழ் பேஸ்புக் பக்கத்தில் இணைய இங்க கிளிக் செய்யுங்க!!


டைம்ஸ் தமிழின் வாட்சப் குரூப்பில் இணைய இங்க கிளிக் செய்யுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here