கையை பிடி! கண்ணை பாரு! உள்மூச்சு வாங்கு! மலரும் ரொமான்ஸ்! – Pandian stores serial today episode 24/08/2021

0
21
Facebook
Twitter
WhatsApp
Telegram
Join @ Times Tamil on Telegram

பாண்டியன் ஸ்டோர்ஸ்!

கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் புது வீட்டில் குடியேறுகின்றனர். வாடகை எவ்வளவு என கேட்கும் போது, ஆயிரம் ரூபாய் தான் என கூறுகிறார். இப்பொழுது வாடகை தர வேண்டாம் என்றும் மாதத்தின் கடைசியில் வாடகை கொடுத்தால் போதும் என கூறுகிறார். கண்ணனும் ஐஸ்வர்யாவும் இந்த வீடாவது கிடைத்ததே என்று கூறி மகிழ்ச்சி அடைகின்றனர். மாமா! எதனால் உனக்கு என் மேல் காதல் வந்தது? என்று ஐஸ்வர்யா கேட்கிறார்.

மலரும் ரொமான்ஸ்!

திடீரென கேட்டால் நான் எப்படி பதில் சொல்வேன் என்று கண்ணன் சொல்கிறாள். கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு மாமா என ஐஸ்வர்யா கேட்கும் போது, நீ மட்டும் தான் ஐஸ்வர்யா என்னை ஒரு மனிதனாக மதிப்பாய்., நம்புவாய் என கூறுவதை கேட்டு ஐஸ்வர்யா மகிழ்ச்சி அடைகிறாள். சரி நம் தூங்கலாம் என சொல்லிவிட்டு ஐஸ்வர்யா தன்னுடைய துப்பட்டாவை விரித்து உறங்க செல்லலாம் என கூறுகிறாள். இருவரும் இது நம்ம வீடு என்று இருவரும் சொல்லி மகிழ்கின்றனர்.

உன்ன ரொம்ப பிடிக்கும் மாமா எனக்கு!

உனக்கு ஏதும் கஷ்டம் இல்லேல! ஐஸ்வர்யா என்று கேட்கும் போது, ஐயோ இல்ல மாமா! நான் தான் திடீரென வீட்டை விட்டு வந்து உன்னை கஷ்டப்படுத்தி விட்டேன் என்று ஐஸ்வர்யா சொல்கிறாள். மேலும் என்னை ஏன் ஐஸ்வர்யா உனக்கு பிடிக்கும் என்று கண்ணன் கேட்கும் போது, என்னுடைய அம்மாவிற்கு பிறகு என்னை சிரிக்க வைத்த ஒரே ஆள் நீ தான் மாமா என்று ஐஸ்வர்யா சொல்கிறாள். இருவரும் ஒருவொருக்கொருவர் பார்த்துக் கொண்டே இருக்கும் போது, ரொமான்ஸ் மலர்கிறது.

அப்பா இல்லாத லட்சுமிக்கு என்னை அப்பாவாக்க பார்கிறாளா! இந்த கண்ணம்மா!! – Bharathi Kannamma Serial Today 24/08/2021

வருந்தும் குடும்பத்தார்!

இப்போல்லாம் இதை பத்தி நாம் யோசிக்க முடியாது என கூறிவிட்டு, இருவரும் தூங்க செல்கின்றனர். நான் வேலைக்கு சென்று உன்னை படிக்க வைக்கிறேன் ஐஸ்வர்யா என கண்ணன் சொல்லி விட்டு தூங்குகிறான். அடுத்ததாக மூர்த்தி தனது வீட்டிற்கு வந்து அம்மாவை பற்றி கேட்கிறார். அம்மா இப்பொழுது எப்படி இருக்கிறார்கள் என்று நலம் விசாரிக்கும் போது, அவங்க இன்னும் சரியா சாப்பிடாம, தூங்காம தான் இருக்காங்க என்று வீட்டில் உள்ளவர்கள் சொல்கின்றனர்.

சிக்கிய ஜீவா!

இதை கேட்ட மூர்த்தி, கதிர், ஜீவா மிகவும் வருத்தம் அடைகின்றனர். அடுத்ததாக கடையின் வரவு செலவு கணக்குகளை தற்போது பார்த்து விடலாம் என்று மூர்த்தி சொல்கிறார். மூவரும் சேர்ந்து கணக்கு பார்த்துக் கொண்டிருக்கும் போது, கணக்கில் 4000 ருபாய் விடுபடுவதற்கு மூர்த்தி கண்டுபிடிக்கிறார். ஜீவாவிடம் கேட்கும் போது, முழிக்கிறார் மேலும் அதை என்னவென்று பார்த்துவிடு என சொல்லிவிடுகிறார் மூர்த்தி. அந்த பணத்தை நீ கண்ணனுக்கு கொடுத்தாயா? என்று கதிர் ஜீவாவை கேட்கும் பொழுது ஆமாம்! என்பது போல் ஜீவா தலை அசைகிறார். இந்த காட்சியுடன் இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் நிறைவடைகிறது.

டைம்ஸ் தமிழ் பேஸ்புக் பக்கத்தில் இணைய இங்க கிளிக் செய்யுங்க!!


டைம்ஸ் தமிழின் வாட்சப் குரூப்பில் இணைய இங்க கிளிக் செய்யுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here