• Wed. May 19th, 2021
National

அமைச்சர் கொரோனாவுக்கு பலி!! அதிர்ச்சியில் கட்சியினர்!!

ByADMIN

May 19, 2021

இந்தியாவில் நாளுக்குநாள் கொரோனா தொற்றுக்கு இறப்புகள் அதிகமாகி கொண்டு வரும் நிலையில் சாதாரண மக்கள் மட்டும் இல்லாமல் பிரபலமானவர்களையும் எடுத்து கொண்டு வருகிறது இந்த கொரோனா. திரை பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பல பேர் கொரோனாவுக்கு பலியாகி வருகின்றனர்.

UP: कोरोना ने एक महीने में 5वें विधायक की सांसें छीनीं, मंत्री विजय कश्यप का निधन

இந்நிலையில் உத்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்த அமைச்சர் விஜய் காஷ்யப் கொரோனாவுக்கு தற்போது பலியாகியுள்ளார். உத்திர பிரதேச மாநிலம் முசாபர் நகரில் போட்டியிட்டு பாஜக எம் எல் ஏ வாக தேர்ந்து எடுக்கப்பட்டவர் விஜய் காஷ்யப். 52 வயதாகும் இவர் யோகி ஆதித்யநாத் அமைச்சரவில் வெள்ள கட்டுப்பாடு மற்றும் வருவாய் துறை அமைச்சராக இருந்துவந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த சிலதினகளுக்கு முன்னர் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டு வேதாந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. நேற்று இரவு சிகிச்சை பலன் அளிக்காமல் மரணம் அடைந்தார். இதனால் அவர் தொண்டர்கள் மற்றும் கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இவருக்கு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் ராஜ்நாத் சிங்க் ஆகியோர் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்தனர்.


ADMIN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *