திரையில் வரும் பெரும் நடிகர்கள் கூட சமூக பிரச்சனைக்கு எதிராக திரையில் குரல் கொடுத்துவிட்டு பொது வாழ்க்கையில் கண்டு கொள்வதில்லை. ஆனால் திரையிலும் சரி பொது காலத்திலும் சமூக பிரச்சனைகளுக்காக குரல் குடுக்கும் நடிகர்களில் முதல் ஆளாக இருப்பது யாரென்றால் அது சித்தார்த் ஆக தான் இருக்கும்.
நடிகர் சித்தார்த் (@actor-siddharth) அவர்கள் சில நாட்களாகவே சமூக பிரச்சனைகளுக்காக தனது ட்விட்டர் பக்கத்திலும்,
மத்தியில் ஆளும் அரசை உரிமை கேள்விகளால் வறுத்தெடுத்து வருகிறார். இதனால் தனக்கும் தன்குடும்பத்தினருக்கும் பிஜேபி கட்சிகளை சேர்ந்த பலரால் ஆபத்து எனவும் சொல்லி வருகிறார். ஆனால் அவரும் அதற்கு பயந்து விட்டுக்கொடுப்பதாக இல்லை.
இந்நிலையில் மாரிதாஸ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில்
“டேய் விடியல் எங்கடா?
பெட் எங்கடா/
பிணம் எரிக்கா இடம் எங்கடா?
டேய் கூத்தாடி சித்தார்த் உன்னை தாண்டா?
மக்கள் வருமானம் இல்லாத சூழ்நிலையில்
மின்கட்டணம் கட்ட சொல்கிறது விடியல் அரசு!!
இப்ப வாய திறடா சித்தார்த்,
வாய்க்கொழுப்பு பேசி திறந்த!
இப்ப வாய திறடா டேய் !!
என பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நாகரிக வசைபாடியுள்ளார் நடிகை கஸ்தூரி
அவர் ட்விட்டர் பக்கத்தில்
எதிரிகளையும் மதிப்பதுதான் தமிழர் நாகரீகம் எனவும், Why are you demeaning @actor-siddharth Profession Here?
நீங்கள் வணங்கும் ஈசனும் கூட கூத்தபிரான் தான் எனவும், நடிகர்கள் கூத்தாடி என்றால் உங்கள் தொழில்
வாயாடி சரியா?Do BJP’s Army of Actors Agree With This attack?
என பதிவிட்டுள்ளார். தக்க பதிலடி கொடுத்துள்ளதாக ரசிகர்கள் வரவேற்று கமெண்ட்களை அள்ளி தெளித்துள்ளனர்.