• Thu. May 20th, 2021

பிக் பாஸ் வளாகத்துக்கு சீல்!! அதிகாரிகள் அதிரடி!!

ByADMIN

May 20, 2021

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக தொழிற்சாலைகள், சின்னத்திரை மற்றும் சினிமா படப்பிடிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் இந்த தடையை மீறி சென்னையில் மலையாள பிக் பாஸ் படப்பிடிப்பு நடைபெற்றது. இதை அறிந்த அதிகாரிகள் அவற்றிற்கு சீல் வைத்தனர்.

From BB house to the Himalayas: Take a look at the fairytale love story of TV couple Pearle Maaney and Srinish Aravind

மலையாள பிக் பாஸ்:

சென்னை பூந்தமல்லி EVP பிலிம் சிட்டியில் மலையாள பிக் பாஸ் நடைபெற்று வந்தது. தமிழக அரசு ஊரடங்கு போட்டதும் எந்த படப்பிடிப்பும் நடந்த கூடாது என்று அறிவிப்பு வெளியானது. ஆனால் அந்த தடையை மீறி மலையாள பிக் பாஸ் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்நிலையில் இத்தகவல் கிடைத்த அதிகாரிகள் அங்கு சென்று ஊழியர்கள் மற்றும் நடிகர்களை வெளியேற்றி அந்த வளாகத்திற்கு சீல் வைத்தனர்.

6 பேருக்கு கொரோனா:

ஏற்கனவே மலையாள பிக் பாஸ் ல் பணிபுரிந்த ஊழியர்கள் 6 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. விதிகளை மீறி படிப்பிடிப்பு நடத்தப்பட்டதால் சீல் வைக்கப்பட்டது. வருகிற 31 தேதி வரை சின்னத்திரை படப்பிடிப்பு நடத்தக்கூடாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.


ADMIN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *