• Sun. May 23rd, 2021
செய்திகள்

இது பண்ணா போதும் கருப்பு பூஞ்சையிலிருந்து தப்பிக்கலாம்!!

ByADMIN

May 22, 2021

கருப்பு பூஞ்சை: உத்தரகண்டில் முதல் பலி | Dinamalar Tamil News

கொரோனா தொற்று இந்தியாவில் கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில் தொற்று ஏற்பட்டவர்களுக்கு அதோடு சார்ந்த தொற்று நோய்கள் ஏற்பட ஆரம்பித்து இருக்கிறது. அந்த வகையில் வேகமாக பரவி வரும் நோய் தான் மியூகோர்மைக்கோசிஸ் என்று அழைக்கப்படும் கருப்பு பூஞ்சை நோய். இது ஒரு பூஞ்சை நோயாகும். இது வெகு நாளாக ஸ்டெராய்டு எடுப்பவர்களை இந்த நோய் தாக்குகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் 3 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய்.: மாவட்ட சுகாதாரத்துறை தகவல் - Dinakaran

நீண்ட காலமாக மருத்துவமணையில் சிகிச்சை எடுத்துக் கொண்டவர்கள், வெண்டிலெட்டரில் இருந்தவர்கள் ஆக்ஸிஜன் எடுத்துக் கொண்டவர்கள், வெகுநாளாக நீரிழிவு நோய் உள்ளவர்களை இந்த கருப்பு பூஞ்சை நோய் தாக்குகிறது. இதை சரியான சிகிச்சையின் மூலம் குணப்படுத்தாமல் விட்டு விட்டால் பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடும்.

கருப்பு பூஞ்சையின் அறிகுறிகள்:

தமிழகத்தை மிரட்டும் கருப்பு பூஞ்சை தொற்று- சிறுமி உள்பட 9 பேருக்கு தீவிர சிகிச்சை || Tamil News black fungus girl including 9 affected

கருப்பு பூஞ்சை நோயின் அறிகுறிகள் என்னவென்றால் வாயிலுள்ள திசுக்கள், நாக்கு, ஈறுகள், மூக்கடைப்பு, கடுமையான வலி, கண்களுக்கு கிழே கனத்தன்மை, தலைவலி மற்றும் காய்ச்சலின் மூலம் இந்நோய் தொற்றை அறிந்து கொள்ளலாம். சில வழிமுறைகளை பின்பற்றும் போது இந்நோயிலிருந்து விடுபடலாம்.

1.வாய் பகுதியை தூய்மையாக வைத்துக் கொள்ளவேண்டும்:

நமது வாயின் வழியாக தான் ஸ்டெராய்டு போன்ற மருந்துகளை எடுத்துக் கொள்கிறோம். எனவே வாய்ப்பகுதியை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். எனவே நாள் ஒன்றுக்கு மூன்று முறை நல்ல பல்பொடி வைத்து தேய்த்து சுத்த படுத்த வேண்டும்.

2.வாயை நன்றாக கொப்பளித்தல் வேண்டும்:

கொரோனா தொற்றிலிருந்து விடுபட்டவுடன் வாயை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். அதற்கு தொற்று பாதிப்பிலிருந்து மீண்டவுடன் துலக்கும் பிரஷை மற்ற வேண்டும். மற்றும் வாயை நன்றாக எப்பொழுதும் கொப்பளிக்கும் போது கருப்பு பூஞ்சை என்ற தொற்றிருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம்.

3.பிரஷ் மற்றும் டங்க் கிளீனரை வேறு இடத்தில வைக்க வேண்டும்:

கொரோனா தொற்றிலிருந்து குணம் அடைந்ததும் பிரஷ் மற்றும் டங்க் கிளீனரை தனியாக ஒரு இடத்தில வைக்க வேண்டும். வீட்டில் வேறு நபர்கள் வைத்திருக்கும் இடத்தில் வைக்க கூடாது.

இந்த மூன்று வழிமுறைகளை பின்பற்றும் போது கருப்பு பூஞ்சை ஏற்படாமல் நம்மை பாதுகாத்து கொள்ளலாம்.


ADMIN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *