அப்பா இல்லாத லட்சுமிக்கு என்னை அப்பாவாக்க பார்கிறாளா! இந்த கண்ணம்மா!! – Bharathi Kannamma Serial Today 24/08/2021

0
43
Facebook
Twitter
WhatsApp
Telegram
Join @ Times Tamil on Telegram

பாரதி கண்ணம்மா!

இன்றைய பாரதி கண்ணம்மா தொடர் மிகவும் விறுவிறுப்பாக உள்ளது. கண்ணம்மாவின் அப்பா லட்சுமியிடம் நான் உன்னுடைய தாத்தா என கூறவும் குடும்பத்தார் அனைவரும் ஷாக் ஆகின்றனர். அப்பொழுது அஞ்சலியை நீ சித்தி என்று கூப்பிடும் போது, அஞ்சலியின் அப்பாவாகிய நான் உனக்கு தாத்தா தான லட்சுமி..,என சொல்லவும் அவள் சரி என சொல்கிறாள். தான் வாங்கி வந்த சாக்லெட்டை லட்சுமியிடம் கொடுத்துவிட்டு அவர் புறப்படுகிறார். அவர் கிளம்பும் போது லட்சுமி திடீரென தாத்தா என கூப்பிட்டதும், கண் கலங்கிய அவர் லட்சுமி பாப்பாவை கட்டியணைத்து கொண்டு கொஞ்சுகிறார்.

விஷ மாத்திரையை கொடுத்த வெண்பா!

அடுத்த கட்சியில் அஞ்சலியை பார்க்க வெண்பா வருகிறார். நீ எப்படி இருக்க அஞ்சலி என்று வெண்பா கேட்கும் போது, நெஞ்சு வலி வந்துகொண்டே தான் இருக்கிறது என்று அவர் கூறுகிறார். மேலும் பாரதி எழுதி கொடுத்ததாக சொல்லி ஒரு விஷ மருந்தை எழுதி கொடுக்கிறார். மாத்திரையை சரியாக எடுத்துக் கொண்டால் உன்னுடைய பிரச்சனை முழுமையாக சரியாகிவிடும் என கூறுகிறார். இதை கேட்ட அஞ்சலி வெண்பாவிற்கு மிகவும் நன்றி சொல்கிறார்.

மனம் வருந்திய கண்ணம்மாவின் அப்பா!

நான் தான் உன் அம்மா என்பதை யாரிடமும் சொல்ல கூடாது என்று கண்ணம்மா சொல்லியதை லட்சுமி நினைத்துக் கொண்டு இருக்கிறாள். உன் பக்கத்தில் தூங்கணும், உன் கையால் சாப்பிடணும் என்று ஆசையாக இருக்கு அம்மா என்று லட்சுமி தனியாக உட்கார்ந்து பேசிக் கொண்டு இருக்கிறாள். கண்ணம்மாவை நினைத்து கண்ணம்மாவின் அப்பா, மிகவும் வருத்தம் அடைகிறார். அவளது வாழ்க்கை இப்படி போய்விட்டதே என்று வருந்திக் கொண்டிருக்கும் போது அவரது மனைவி, கோபப்படுகிறார்.

கள்ள சிரிப்பழகி வெளியிட்ட கவர்ச்சி புகைப்படத்தால் காவியம் பாடும் ரசிகர்கள்! – பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையின் வைரல் புகைப்படம்!

கண்ணம்மாவின் நிலை அப்படி!

ஏன் கண்ணம்மா இப்படி செய்கிறாள் அந்த லட்சுமி என்னுடைய பொண்ணு தான் என்பதை ஒத்துக்க வேண்டிதான! என்று கண்ணம்மாவின் சித்தி சொல்லும் போது, அவளது நிலைமையை எடுத்து கூறுகிறார் எனினும் அவர் அவளை நெனச்சு நெனச்சு நெஞ்சுவலி வந்துராம! என குதர்க்கமாக கூறிவிட்டு செல்கிறார். கண்ணம்மாவை கண்டபடி திட்டிக் கொண்டு இருந்த பாரதி, திடீரென லட்சுமியை கூப்பிடுகிறான். நான் உன்னிடம் காலையில் கடுமையாக நடந்து கொண்டதற்கு மன்னிப்பு கேட்கிறார்.

கொஞ்சம் கொழுப்பு கொஞ்சம் திமிரு ! – சொட்டும் மழையில் சோக்காக ரீல்ஸ் செய்த ராஜா ராணி2 நாயகன்! சொக்கி போன ரசிகர்கள்!

ஹேமாவோட அம்மா எங்கே!

லட்சுமி பாரதியிடம் லட்சுமி உடைய அம்மா எங்கே? அங்கிள் என கேட்கும் போது, அவன் சமாளிக்கிறார். அது சரி உன்னுடைய அப்பா எங்கே? என பாரதி கேட்கும் போது என்னுடைய அப்பா வெளிநாட்டில் இருக்காங்க என்றும் அவரை இதுவரை நான் ஒருமுறை கூட பார்த்ததே இல்லை அங்கிள்., என் அப்பா ரொம்ப மோசம் என லட்சுமி பாரதியிடம் சொல்லி வருத்தம் அடைகிறாள். இதை கேட்ட பாரதி அப்பா இல்லாத இந்த குழந்தைக்கு என்னை அப்பவாக்க பார்க்கிறாளா? இந்த கண்ணம்மா!!! என்று நினைத்து அதீதமாக கோபப்படும் காட்சியுடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் முடிவடைகிறது.

டைம்ஸ் தமிழ் பேஸ்புக் பக்கத்தில் இணைய இங்க கிளிக் செய்யுங்க!!


டைம்ஸ் தமிழின் வாட்சப் குரூப்பில் இணைய இங்க கிளிக் செய்யுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here