பாரதி வீட்டில் லட்சுமியை விட்டு செல்லும் கண்ணம்மா! – Bharathi Kannamma Serial Today Episode 18/08/2021

0
39
Facebook
Twitter
WhatsApp
Telegram
Join @ Times Tamil on Telegram

பாரதி கண்ணம்மா!

பாரதி, கண்ணம்மாவிடம் பல்வேறு கேள்விகள் கேட்டு கொண்டிருக்கும் போது லட்சுமி எழுந்து வருகிறாள். அம்மா என கூப்பிட போன லட்சுமி, கண்ணம்மாவின் சைகையால் சமையல் அம்மா என கூப்பிடுகிறாள். உடனே லட்சுமியை கட்டியணைத்து கொள்ளும் கண்ணம்மா என்ன ஆச்சு உனக்கு., என்று கேட்கிறார். அதற்கு புட் பாய்சன் தான் சமையல் அம்மா என கூறிய பிறகு., சரி வா நம்ம வீட்டுக்கு போகலாம் என்று கண்ணம்மா லட்சுமியை கூப்பிட்டு செல்கிறாள். அப்போது தடுத்து நிறுத்திய பாரதி அவளது அம்மா வந்தால்தான் லட்சுமியை விடுவேன் என்கிறார்.

அம்மாவை பிரிந்து தவிக்கும் லட்சுமி!

லட்சுமியின் அம்மா அப்பா என்னிடம் தான் விட்டு சென்றார்கள் மேலும் அவர்கள் எனக்கு போன் செய்து கேட்டால் நான் என்ன செய்வது என்று கண்ணம்மா பல்வேறு கேள்விகள் கேட்ட பின்னரும் பாரதி கடும் கோபத்துடன் இருப்பதால் சமாளிக்க முடியவில்லை. வேறு வழி இல்லாத காரணத்தினால் சமையல் அம்மா கிளம்புகிறேன் என்று லட்சுமியிடம் கூறிவிட்டு கண்ணம்மா கிளம்புகிறாள். இதை கண்ட லக்ஷ்மி கண் கலங்கிய கண்களுடன் மிகவும் மௌனமாக நிற்கிறாள். இப்பொழுது கூட நீ உண்மையை சொல்ல மாட்டிகிறாய் என்று பாரதி மிகவும் கோபப்படுகிறான்.

மனம் குமுறிய கண்ணம்மா!

லட்சுமியை பிரிந்து தவிக்கும் கண்ணம்மா அவளை நினைத்தபடி மனம் வருந்தி கொண்டு இருக்கிறார். லட்சுமி உடைய நிலைமையை நினைத்து மிகவும் மனம் கஷ்டப்படுகிறாள். லட்சுமி என்னுடைய பொண்ணு தான் என்று பாரதியிடம் சொல்லி அவளை என்னுடன் அழைத்து வரவேண்டும் என தோணுகிறது. ஆனால் அவ்வாறு நான் செய்தால், லட்சுமியின் முன்னாடியே அவர் என்னுடைய நடத்தையை பற்றி தவறாக பேசுவார். அது லட்சுமியை பாதித்துவிடும் என கண்ணம்மா நினைத்து கொண்டே இருக்கிறார்.

மையால கண்ணெழுத்தி என் வாலிபத்த மயக்குறியே! – சித்தி 2 சீரியல் நாயகி வெளியிட்ட ரீல்ஸால் சிலிர்த்து போன ரசிகர்கள்!

அக்கறை காட்டும் அகில்!

அமைதியாகவே இருக்கும் அஞ்சலியிடம் அகில் மனம் விட்டு பேசுகிறான்.உன்னுடைய மனதில் ஏதோ ஒன்று ஓடிக்கொண்டே இருக்கிறது என்றும் கர்ப்ப காலத்தில் எதையும் நினைக்காதே! குழந்தையுடன் பேசு., உனக்கு தான் ஷாப்பிங் செய்ய பிடிக்கும்ல., இப்போவே கூட குழந்தைக்கு ட்ரெஸ் எடுத்து வை என்று சமாதானம் செய்கிறார். இப்படி உடைந்து போய் உட்கார்ந்து இருக்கும் போது மனம் மிகவும் கஷ்டப்படுகிறது அஞ்சலி என அகில் கூறுகிறார். மறுபடியும் ஒரு ஹாஸ்பிடலுக்கு செல்லலாம் என்று அகில் கூப்பிட்டதை கேட்ட அஞ்சலி மிகவும் பதட்டமடைகிறாள்.

அய்யோ அய்யோ உன் கண்கள் அய்யய்யோ!! பாட்டுக்கு குத்தாட்டம் போடும் ராஜா ராணி மயிலு!! – ஆள் அடையாளமே தெரில!

கோபப்படும் அஞ்சலி!

வேறு ஒரு டாக்டர் வந்து செக் செய்தால் உண்மை தெரிந்து விடுமே! அப்பொழுது கர்ப்பத்தை கலைக்க சொல்வார்கள். ஒருபோதும் இதற்கு அனுமதிக்கவே கூடாது என நினைத்த அஞ்சலி, அகிலிடம் கோபமாக கத்திவிட்டு எழுந்து செல்கிறாள். கண்ணம்மா, லட்சுமியை நினைத்து நினைத்து மனம் வருந்தி கொண்டே இருக்கிறாள். லட்சுமி அங்கே இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் எண்ணலாம் நடக்கபோகிறதோ என்று மிகவும் பதட்டம் அடைகிறாள். பாரதி அவளை துருவி துருவி கேள்வி கேட்கும் போது அவள் என்ன சொல்லி சமாளிக்க போகிறாளோ என்று கண்ணம்மா மனதில் ஓடிக்கொண்டிருக்கும் காட்சியுடன் இன்றைய பாரதி கண்ணம்மா தொடர் முடிவடைகிறது.

டைம்ஸ் தமிழ் பேஸ்புக் பக்கத்தில் இணைய இங்க கிளிக் செய்யுங்க!!


டைம்ஸ் தமிழின் வாட்சப் குரூப்பில் இணைய இங்க கிளிக் செய்யுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here