ஆக்ரோஷமான பாரதியால் அதிர்ந்து போன குடும்பத்தார்! – Bharathi Kannamma Serial Today episode 16/08/2021

0
36
Facebook
Twitter
WhatsApp
Telegram
Join @ Times Tamil on Telegram

பாரதி கண்ணம்மா!

லட்சுமியை எதற்காக இங்கே கூட்டிக்கொண்டு வந்தாய்! என்று பாரதியின் அம்மா கேட்கும் போது, சௌந்தர்யா குடும்பத்தினர் பதறிப்போய் நிற்கின்றனர். இவளை அந்த சமையல் அம்மா வீட்டில் விட்டுவிடு என்று பாரதியின் அப்பா சொல்வதற்கு பாரதி அதிகமாக கோபப்படுகிறான். அந்த சமையல் அம்மா என்ன டாக்டரா! ஹேமா லட்சுமி என அனைவரையும் அவளது வீட்டில் விடுவதற்கு! என்று கூறுகிறார். லட்சுமியின் அம்மா அப்பா வந்தால் தான் லட்சுமியை விடுவேன் அதுவரை லட்சுமி என்னிடம் தான் இருப்பாள் என்று பாரதி மிகவும் ஸ்ட்ராங்காக சொல்கிறார்.

திமிராக சொல்லும் பாரதி!

யாரோ ஒரு வீட்டு பிள்ளையை கூட்டி கொண்டு நீ உன்னுடன் வைத்து கொள்கிறேன் என கூறுவது சரியாக தெரியவில்லை பாரதி என சௌந்தர்யா சொன்ன போதிலும், பாரதி விடுவதாக இல்லை. இவர்களுடைய அம்மா அப்பா வரும் வரையில் ஹேமாவை நான் எப்படி பார்த்து கொள்வேனோ அதே அளவிற்கு நான் லட்சுமியையும் பார்த்து கொள்வேன் என்று கண்டிப்புடன் சொல்கிறான். லட்சுமியை நீ இங்கே அழைத்து சமையல் அம்மாவிற்கு தெரியுமா? என சௌந்தர்யா கேட்ட பிறகும் கூட, தெரிஞ்சு இருக்கும் என பாரதி திமிராக சொல்கிறார்.

பேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்! அது குத்தால சகவாசம்! – குத்தாட்டம் போடும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகன்!!

மன உளைச்சலில் பாரதி!

இவ்வளவு நாள் எல்லாரும் சேர்ந்து என்னை எப்படி ஏமாற்றி இருக்கிறீர்கள்! அந்த கண்ணம்மாவே என் முன்னாடி வந்து லட்சுமி என்னுடைய பொண்ணு தான் என்று சொல்வதற்கு 1 வாரமானாலும் சரி, 2 மற்றும் 3 மாதங்கள் ஆனாலும்சரி., லட்சுமியை நான் விடவே மாட்டேன் என்று பாரதி அதீத கோபத்துடன் நினைத்து கொண்டிருக்கிறான். லட்சுமி என்னுடைய பொண்ணு தான் என பாரதிக்கு தெரிந்தால் அவர் அதிக கோபத்துடன் நடந்து கொள்வாரே! என்றும் இப்போது பாரதியிடம் லட்சுமியை என்னிடம் கொடுங்கள் என்று கேட்க முடியாதே என நினைத்து கொண்டே பாரதியின் வீட்டிற்கு வருகிறார்.

தனுஷுக்கே டப் கொடுத்த பாண்டியன் ஸ்டோர்ஸின் செல்ல பிள்ளை!! – வெளியான ரீல்ஸால் குஷியான ரசிகைகள்!!

மிகுந்த ஏமாற்றம்!

அஞ்சலி, அகில், லட்சுமி மற்றும் கண்ணம்மா என மொத்த குடும்பமாக சேர்ந்து என்னை ஏமாற்றி விட்டார்கள் என்று பாரதி அதிகமாக புலம்புகிறான். என்னை பச்சையாக ஏமாற்ற எப்படி அம்மா உங்களுக்கு மனசு வந்துச்சு! என்று கண்டவாறு யோசித்து கொண்டே இருக்கிறான். அஞ்சலியின் வீட்டிற்கு வந்திருக்கும் அவரது அம்மா அப்பா அந்த குழந்தை யாரு என லட்சுமியை பார்த்து கேட்கின்றனர். இவர்களிடம் சொல்லலாமா வேண்டாமா என சிந்தித்து கொண்டே இருந்த அஞ்சலியை கட்டாயப்படுத்து லட்சுமி யார் என்று தெரிந்து கொள்ள முயல்கின்றனர்.

குழம்பும் குடும்பத்தினர்!

அப்போது அஞ்சலியும் சொல்லி விடுகிறாள். இவள் யாரோ ஒரு பொண்ணு அல்ல..,அது கண்ணம்மாவுடைய பொண்ணு என்று அஞ்சலி கூறுகிறாள். மேலும் ஹேமா தற்போது கண்ணம்மா வீட்டில் தான் இருக்கிறாள் என்று அஞ்சலி கூறுவதை கண்டு அஞ்சலியின் அம்மா மற்றும் அப்பா ஷாக் ஆகி நிற்கின்றனர். நடந்த கதை அனைத்தும் அஞ்சலி தன்னுடைய அம்மாவிடம் சொல்லும் போது உங்களுடைய குடும்ப கதை இப்படி தலை சுத்துதே! என அவர் கூறுகிறார். குழம்பி போன குடும்பத்தினர், கண்ணம்மாவிற்கு போன் செய்து நடந்த விஷயத்தை சொல்கின்ற காட்சியுடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் முடிவடைகிறது.

டைம்ஸ் தமிழ் பேஸ்புக் பக்கத்தில் இணைய இங்க கிளிக் செய்யுங்க!!


டைம்ஸ் தமிழின் வாட்சப் குரூப்பில் இணைய இங்க கிளிக் செய்யுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here