கோவாக்சின் தடுப்பூசியை சிறுவர்களுக்கு செலுத்தி பரிசோதிக்க மத்திய அரசு அனுமதி

Share

ஐராபாத்திலிருந்து இயங்கும் பாரத் பையோடெக் நிறுவனம் கொரோனாவுக்கு எதிராக செயல்படும் கோவாக்சின் தடுப்பூசிகளை தயாரித்து மத்திய அரசுக்கு வழங்கி வருகிறது. இந்த தடுப்பூசி தற்போது 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

Serum Institute, Bharat Biotech gear up to export Covid-19 vaccine shots | Business Standard News

இந்நிலையில் 2 வயது முதல் 18 வயது வரை உள்ள சிறுவர்களுக்குகோவாக்சின் தடுப்பூசி செலுத்தி இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட பரிசோதனையை மேற்கொள்ள மத்திய மருந்து கட்டுப்பாடு அமைப்புக்கு நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. இதனை ஏற்று சிறுவர்களுக்கு தடுப்பூசி போட்டு பரிசோதிக்க அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Coronavirus Vaccine: India's COVID-19 vaccine 'Covaxin' status, test results and all you need to know | The Times of India

டெல்லி, பாட்னா மற்றும் நாக்பூரில் உள்ள மையங்களில் இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்ட பரிசோதனை நடைபெற உள்ளதாகவும் 525 சிறுவர்களுக்கு இவற்றை செலுத்தி பரிசோதிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Coronavirus vaccine: When will the children receive it? Here's what all parents must know | The Times of India

இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்ட பரிசோதனைக்கு அனுமதி அளிக்கப்பட்ட போதிலும் இரண்டாவது கட்ட தகவல்களை மூன்றாவது கட்ட பரிசோதனைக்கு முன் இடைக்கால அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டுமென பாரத் பையோடெக் நிறுவனத்திற்கு அறிவுத்தப்பட்டுள்ளது.


Share
Tags: a vaccine, co vaccine, co vaccine available hospital in chennai, co vaccine available in chennai, co vaccine in chennai, co vaccine registration, co vaccine side effects, covaccine and covishield, covaccine and covishield which is better, covaccine or covishield, covaccine or covishield which is best, covaccine vs covishield

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: